அபிஷேகப் பிரியரான ஈசனுக்கு சிவராத்திரியன்று நடைபெறும் அபிஷேகத்திற்கு, அபிஷேகப் பொருட்கள் வாங்கித் தருவது அநேக பலன்களைத் தரும். என்ன வாங்கித் தந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பார்ப்போமா...
மாப்பொடி - கடன் நிவாரணம்
தைலம் - சுகம்
நெல்லிமுள்ளி - வியாதி போக்கும்
மஞ்சள் பொடி - அழகு அளிக்கும்
நீர்த் திரவியம் - நற்பேறு அளிக்கும்
பஞ்சகவ்யம் - தூய்மையை அளிக்கும்
பஞ்சாமிர்தம் - வெற்றி தரும்
பால் - ஆயுள் வளர்க்கும்
தயிர் - மக்கட்பேறு தரும்
தேன் - இன்பம் அளிக்கும்
கரும்புச்சாறு - பிணிகள் நீங்கும்
சர்க்கரை - பகைவரை அழிக்கும்
அன்னம் - அரச பதவி கிடைக்கும்
இளநீர் - யோகம் கிடைக்கும்
சந்தனம் - செல்வத்தைக் கொடுக்கும்
வில்வ இலை நீர் - அச்சத்தைப் போக்கும்.
No comments:
Post a Comment